Monday 4 April 2011

6ம் திகதியிலிருந்து ராணா படப்பிடிப்பு ஆர

டந்த புதன் கிழமையோடு ராணா போட்டோ சூட் முடிந்துவிட்டது.

ரஜினி, தீபிகா படுகோனோ இருவரும் கலந்து கொண்டார்கள். 

ஏவிஎம் ஸ்டுடியோவின் பதினொராவது தளத்தில் நடந்த இந்த போட்டோ சூட்டிங்கை அடுத்து, வரப்போகும் 6ம் திகதியில் இருந்து படப்பிடிப்பும் ஆரம்பம் ஆகிறதாம்.

பொதுவாக ஏவிஎம் 8 வது தளம் மீது தனி சென்ட்டிமென்ட் வைத்திருக்கிறார் ரஜினி. அந்த சென்ட்டிமென்ட் காரணமாக இந்த முறையும் ராணா படப்பிடிப்பை அதே தளத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினாராம்.

மிகப்பெரிய செட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த தளத்தில், கடந்த சில தினங்களாக இந்த தளத்தில் நடைபெறும் செட் வேலைகளை வந்து மேற்பார்வை இட்டு செல்கிறாராம் லதா ரஜினிகாந்த்.

ஏப்ரல் 6ம் திகதி துவங்குகிற படப்பிடிப்பு தொடர்ந்து இருபது நாட்கள் நடைபெற இருப்பதாக தகவல் கசிகிறது. இந்த ஷெட்யூல் முடிந்த பிறகு தான் லண்டன் கிளம்புகிறார்களாம் அத்தனை பேரும். தற்போது போடப்பட்டு வரும் செட் முழுக்க முழுக்க டாக்கி போர்ஷன்களுக்கானது என்கிறார்கள்.